கால்களை இழந்த காதலனை எதிர்ப்பை மீறி திருமணம் செய்த காதலி..

வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் விபத்தில் இரண்டு கால்களையும் இழந்த காதலனை பெற்றோர் எதிர்ப்பை மீறி பெண் திருமணம் செய்துக்கொண்டார்.

வாணியம்பாடியைச் சேர்ந்த விஜய்யும் உதகை மசிலக்குடியைச் சேர்ந்த சில்பாவும் கோவையில் உள்ள கல்லூரியில் படித்த போது காதலித்துள்ளனர். இருவரது காதலுக்கும் பெற்றோர் சம்மதம் தெரிவித்து திருமணம் ஏற்பாடுகள் நடைப்பெற்ற நிலையில், ரயிலில் இருந்து தவறி விழுந்து விஜய்க்கு இடது கால் துண்டானது வலது காலும் செயலற்றுப் போனது.

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த விஜயை சில்பா இன்று திருமணம் செய்துக்கொண்டார். மாற்றுத்திறனாளி என்பதால் பெற்றோர் எதிர்ப்பை தெரிவித்தப்போதும் காதலித்தவரையே சில்பா திருமணம் செய்துள்ளார்.

Leave a Response