சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞர்களை நிர்வாண ஊர்வலமாக கூட்டி சென்ற அ.பி. மக்கள் !

அருணாசலபிரதேசத்தில் உள்ள யிங்கி ஓங் கிராமத்தில்  உள்ள 17 வயது பெண்ணை  அவரது நண்பர் உள்பட 4  இளைஞர்கள் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.  இவர்கள் அனைவரும் மேல் நிலைப்பள்ளியில் படித்துவரும் மாணவர்கள்   தகவலறிந்த கிராம மக்கள் அந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட  இளைஞர்கள் இருவரை சூழ்ந்து கொண்டனர், அவர்களின் ஆடைகளை களைந்து நிர்வாணப்படுத்தி தெருவில் ஊர்வலம் நடத்தியுள்ளனர். கட்டப்பட்டு வரும் காந்தி பாலம் அருகே கடந்த 25 ந்தேதி இந்த சம்பவம் நடந்து உள்ளது.
அதன் பின்னர் அங்குள்ள காவல் நிலையத்தில் இளைஞர்கள் இருவரையும் ஒப்படைத்துள்ளனர். பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுடன் குற்றவாளிகளில் ஒரு இளைஞர் சமூக வலைதளத்தில் நட்பு வட்டத்தில் இருந்துள்ளார். இந்த நிலையில் அந்த  இளைஞருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த இளம்பெண் அவரை நட்பு வட்டத்தில் இருந்து நீக்கியுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த இளைஞர் தமது 3 நண்பர்களுடன் இணைந்து அந்த பெண்ணை ஏமாற்றி அழைத்துச் சென்று கூட்டு பாலியல் பலாத்ககாரம் செய்து உள்ளனர். இந்த விவகாரத்தில் 2 இளைஞர்கள் சிக்கியுள்ள நிலையில் எஞ்சிய இருவரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.

Leave a Response