கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் 66-ம் ஆண்டு, பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் 30-ம் தேதி வெள்ளிக்கிழமை, காலை 5 மணிக்கு, கணபதி ஹோமமும், காலை 10 மணிக்கு, நல்லகாத்து ஆற்றிலிருந்து, திருமஞ்சள் தீர்த்தமும் கொண்டுவரப்படும்.
31-ம் தேதி காலை 5 மணிக்கு கணபதி ஹோமமும், காலை 8 மணிக்கு அண்ணா நகர் பி.கெ.சின்னையன் குழுவினர், காவடிக்குழு, முருக பக்தர்கள் மற்றும் அண்ணா நகர் இளைஞர் குழுவினர், சேலம் மாதேஷ் சுத்து காவடி, அங்கு காவடி மற்றும் பறவைக்காடிகள் எடுத்து வரப்படும்.