களைச் செடிகளுக்கு தீவைத்த விவசாயி தீயில் கருகி பலி !

 மணப்பாறை அருகே விவசாய நிலத்தில் களைச் செடிகளுக்கு தீவைத்தபோது எதிர்பாராதவிதமாக விவசாயி தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே புதுவாடி கிராமம் பறையன்மலை அடிவாரத்தில் கண்ணையன் என்பவருக்கு சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. அங்கு சென்ற அவர் நிலத்தில் ஆள் உயரத்திற்கு வளர்ந்திருந்த களைச் செடிகளுக்கு தனி ஆளாக நின்று தீ வைத்துள்ளார்.

காற்றின் வேகம் காரணமாக தீ மளமளவென பரவி கண்ணையனை சூழ்ந்ததால் அங்கிருந்து வெளியேற முடியாமல் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.  இதை அறிந்த அப்பகுதி மக்கள் அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். இது குறித்து வையம்பட்டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Response