பல்லாவரம் பூங்காவில் காதலியை கொலை செய்த வாலிபர் கைது !

சென்னை பழைய பல்லாவரம் துரைகண்ணு நகரை சேர்ந்தவர் சத்யபிரகாஷ். சென்னை விமான நிலையத்தில் ஏர் இந்தியா நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த ஒரு வருடமாக திருச்சியை சேர்ந்த இந்து என்ற பெண்ணை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், காதலியின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த சத்ய பிரகாஷ், இந்துவை பல்லாவரம் கண்டோன்மெண்ட் பூங்கா அருகே வரவழைத்துள்ளார்.

அங்கு தான் மறைத்து வைத்திருந்த பிளேடால் இந்துவின் தலை, முதுகு உள்ளிட்ட பகுதியில் சரமாரியாக கிழித்துள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த இந்துவை மீட்ட போலீஸார் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தப்பியோட முயன்ற சத்யபிரகாஷை பிடித்து கைது செய்த போலீஸார் அவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Leave a Response