திருவான்மியூர் மருந்தீசுவரர் கோவிலில் தேர் திருவிழா !

திருவான்மியூரில் உள்ள  திரிபுரசுந்தரி அம்மையார் உடனாகிய அருள்மிகு மருந்தீசுவரர் திருக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர விழா சிறப்பாக நடைபெறும். அந்தவகையில் இந்தாண்டுக்கான பங்குனி உத்திர விழா கடந்த 20-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்வான இன்று காலை 6 மணிக்கு தேர் திருவிழா நடைபெற்றது. திரிபுரசுந்தரி அம்மையும், மருந்தீசுவரரும் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

நாளை குதிரை வாகனத்தில் வீதி உலாவும், 30-ம் தேதி திருக்கல்யாண உற்சவமும் நடைபெறும். இதைதொடர்ந்து 31-ம் தேதி சந்திரசேகர் கடல் நீராடல் நடைபெற உள்ளது.

Leave a Response