மிஷ்கின் படத்தால் காயம் பட்ட நாயகன்!!

வழக்கு எண் 18/9 படத்தின் நாயகன் ஸ்ரீ வானத்தில் பறந்து கொண்டு இருக்கிறார். அதற்கான காரணமும் இருக்கிறது .அவர் நடித்த முதல் படமே தேசிய அளவில் விருது பெற்றதோடு, வெற்றிபட நாயகனாக அறிமுகம் என்ற கூடுதல் தகுதியையும் அவருக்கு பெற்று தந்தது .இதற்கெல்லாம் மேலாக ஸ்ரீ மிகவும் ரசித்து மதிக்கும் இயக்குனர் மிஸ்கினின் படத்தில் நாயகனாக வாய்ப்பு வந்த போது அவர் நிச்சயம் பறக்கதான் செய்வார்.

முகமூடி படத்திற்கு பின்பு மிஸ்கின் தயாரித்து, இயக்கி வரும் படம் ஓநாயும் ஆட்டுக்குட்டியும். இந்த படத்தின் படப்பிடிப்பின் போது சண்டைக்காட்சி ஒன்றில் ஸ்ரீ மேலிருந்து குதிக்கும் காட்சி படமாக்கபட்டது. அப்போது அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். காயம்பட்டு ரத்தம் கொட்டினாலும்  அவர் மீண்டும் எங்கிருந்து விழுந்தாரோ அந்த இடத்துக்கே சென்று தான் மீண்டும் நடிக்க தயார் என கூறியதோடு இம்முறை சரியாக குதிக்கவும் செய்தார்!