சென்னை வெயிலுக்கு பயப்படும் நடிகை!!

பிட்சா படத்தை தொடர்ந்து தமிழ் திரை உலகில் த்ரில்லர் படங்களுக்கான ஆர்வம் கூடிக்கொண்டே போகிறது. ஹாலிவுட்  படங்களுக்கு இணையாக த்ரில்லர் படம் எடுப்பது கடினம் என்ற கூற்றை பொய்யாக்க நாளைய மற்றும்  இன்றைய இயக்குனர்கள் மெனக்கெட்டு வந்து அதில் பெரும்  வெற்றியும் பெற ஆரம்பித்துள்ளனர்.

அந்த வரிசையில் திரைஉலகினர் இடையே சமீபமாக பேசப்பட்டு வரும் படம் ஆதியும் அந்தமும். N.K.CRAFT PRIVATE LIMITED, RSR ஆகிய இரு பட நிறுவனங்கள் இணைந்து, கௌஷிக்கின் இயக்கத்தில், வாசனின் ஒளிப்பதிவில் L.V.கணேஷின் மிரள வைக்கும் இசையில், பெரும் செலவில்  படமாக்கப்பட்டு வந்த இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது.

இப்படத்தில் நாயகன் அஜய்க்கு ஜோடியாக அறிமுகமாகிறார் மும்பையை சேர்ந்த புதுமுகம் கவிதா ஸ்ரீநிவாஸ். பல்வேறு நடிப்பு கல்லூரிகளில்  படித்து பட்டம் பெற்றவர். நடனம், சண்டை, கலரி என பயிற்சி பெற்ற இவர் நன்றாக தமிழ் பேச தெரிந்தவர் என்பது கூடுதல் தகுதி.

படத்தின் RUSHES பார்த்த சில பேர் கவிதாவை சென்னையிலே தங்கி விடுங்கள், நிறைய வாய்ப்பு வரும் என்கிறார்களாம். படம் வெளியாகும் நேரம் பார்த்து சென்னை வருவேன் என்னும் கவிதாவுக்கு சென்னை வெயில் என்றால் பயமாம்!