மிஷ்கின் வாய்க்கொழுப்பு ஆசாமி! -‘துப்பறிவாளன்’ படம் உருவான கதை சொல்கிறார் நடிகர் விஷால்

Thupparivaalan1
தமிழ் சினிமாவில் ஜேம்ஸ்பாண்ட் டைப்பிலான விறுவிறுப்பான ஸ்டைலிஷான துப்பறியும் படங்களுக்கு ‘துப்பறிவாளன்’ மூலம் விதை போட்டிருக்கிறார்கள் விஷாலும் மிஷ்கினும்!

இந்தப் படம் இருவருக்குமே வேறொரு லெவல் படமாக இருக்கும் என்பது டீசர் மற்றும் மேக்கிங்கிலேயே தெரிகிறது!

mysskin2

விஷாலும் மிஷ்கினும் ‘முகமூடி’ படத்திலேயே இணைந்திருக்க வேண்டியவர்களாம். முகமூடி கதை முதலில் விஷாலுக்கு தான் வந்ததாம். அப்போது விஷால் சில கமிட்மெண்ட்களில் இருந்ததால் இணைய முடியாமல் போயிருக்கிறது.

ஆனால் இருவருக்குள்ளான நட்பு அப்படியே இருந்திருக்கிறது. அந்த நட்பு துப்பறிவாளனில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது இருவரையும்!

இனி, விஷாலும் மிஸ்கினும் இணைந்ததில் இருக்கிற சுவாரஸ்யங்களை பகிர்கிறார் விஷால்…

‘‘நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து படம் பண்ணுவோம்னு எட்டு வருஷங்களுக்கு முன்னேயே பேச ஆரம்பிச்சோம். இந்த எட்டு வருஷங்கள்ல நாங்க சேர்ந்து படம் பண்ண, மூணு முறை வாய்ப்பு வந்துச்சு. ஆனா, ஒவ்வொரு முறையும் அவரோட வாய்க் கொழுப்புனால அது மிஸ் ஆகிட்டே இருந்துச்சு.

அவர் எனக்கு முக்கியமான நண்பர். அதனால என்கிட்ட எப்படி எக்குத்தப்பா பேசினாலும் பிரச்னை இல்லை. ஆனா, தயாரிப்பாளர்னு வர்றப்போ, ‘நான் இப்படித்தான் இருப்பேன், இப்படித்தான் பேசுவேன்’னு விடாப்பிடியா நின்னா எப்படி ஒத்துவரும்?

நாங்க சேர்ற வாய்ப்பு தள்ளிப்போனது இதனாலதான். அப்படி தள்ளிப் போன வாய்ப்பு இப்போ எட்டு வருஷம் கழிச்சு, ‘துப்பறிவாளன்’ மூலமா நிறைவேறியிருக்கு!’’ என்று உற்சாகமானவர்,

‘‘சேர்ந்து படம் பண்றோம்னு முடிவானதும், மூணு ஜானர்கள்ல வெவ்வேறு கதைகள் சொன்னார். ‘ஜேம்ஸ் பாண்ட் மாதிரி இல்லாம ஷெர்லக்ஹோம்ஸ் மாதிரியான ஒரு ஜானர் இருக்கு’னு சொல்லிட்டு அவர் சொன்ன லைன்தான் துப்பறிவாளன்! இதைத்தான் பண்றோம்’னு சொன்னேன். இதோ படம் முடிஞ்சு ரிலீஸுக்குத் தயாராகிடுச்சு!

இது நிச்சயம் என் கரியர்ல ஒரு தரமான படமா இருக்கும். இன்னொரு விஷயம் சொல்லணும்… துப்பறிவாளன் ஒரு புதுவித ஜானருக்கு நாங்க போட்டிருக்கிற பிள்ளையார் சுழிதான். இத்தோடு விட்டுட மாட்டோம். தொடர்ந்து டிடெக்டிவ் சீரிஸா இதைப் பண்ணலாம்னு இருக்கோம்’’ என்றார்.

Leave a Response