சர்ச்சையைக் கிளப்பிய ‘பத்மாவத்’ திரைப்படம்.. தமிழகத்தில் ரிலீஸ்..

17-1516194120-23-1511419965-padmavati-15

சரித்திரப் படமாக உருவாகியிருக்கும் ‘பத்மாவத்’ படத்தில் ரன்வீர் சிங், சாஹித் கபூர், தீபிகா படுகோனே ஆகியோர் நடித்திருக்கின்றனர். ‘பத்மாவத்’ படத்தை சஞ்சய் லீலா பன்சாலி இயக்க, வியாகாம் 18 மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் வருகிற ஜனவரி 25-ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாக இருக்கிறது. ‘பத்மாவதி’ படத்தில் ராணி பத்மினி பற்றிய தவறான கருத்துகள் இடம்பெறுவதாகக் கூறி ராஜபுத்திரர்கள் அமைப்பினர் படத்தைத் திரையிட எதிர்ப்புத் தெரிவித்தனர். படம் நிச்சயம் வெளியாகும் எனக் கூறிய தீபிகா படுகோனேவின் தலையை வெட்டினால் 5 கோடி பரிசு என அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினர்.

படத்திற்கு எதிர்ப்பு வலுத்ததால், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களின் முதல்வர்கள் படத்தை திரையிட மாட்டோம் என்று அறிவித்தனர். இதன் அடுத்த கட்டமாக படத்தை இயக்கிய சஞ்சய் லீலா பன்சாலி மீதும், நடித்த தீபிகா படுகோனே மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் வலியுறுத்தினார். இந்நிலையில், படத்தில் சர்ச்சைக்குரிய 26 காட்சிகளை நீக்க வேண்டும், ‘பத்மாவதி’ என்ற பெயருடன் ரிலீஸாகாமல் ‘பத்மாவத்’ என்ற பெயரில் ரிலீஸ் செய்யலாம் மற்றும் படத்தில் மூன்று முறை ஒரு விளக்க அறிக்கை வெளியிட வேண்டும் என சென்சார் போர்டு அறிவுறுத்தியது. இந்த நிபந்தனைகளுக்கு படக்குழு ஒப்புக்சொன்னால் யு/ஏ சான்று வழங்குவதாக சென்சார் போர்டு பரிந்துரை செய்தது.

சென்சார் போர்டின் இந்த நிபந்தனைக்கு படக்குழு ஒப்புக்கொண்டு, டைட்டிலையும் மாற்றி படத்தை வெளியிட இருக்கின்றனர். தமிழில் ‘பத்மாவத்’ என டைட்டில் மாற்றப்பட்ட திரைப்படம் வரும் ஜனவரி 25-ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகி இருக்கிறது. இது ரசிகர்களின் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது.

Leave a Response