இந்தியா – தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவிற்கு 287 ரன்கள் இலக்கு..

201801161945096453_1_8duplessis002-s._L_styvpf

இந்தியா – தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் செஞ்சூரியனில் நடைபெற்று வருகிறது. நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சில் 2 விக்கெட் இழப்பிற்கு 90 ரன்கள் எடுத்திருந்தது. டி வில்லியர்ஸ் 50 ரன்னுடனும், டீன் எல்கர் 36 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது.செஞ்சூரியன் டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சில் 258 ரன்னில் ஆல்அவுட் ஆனதால், இந்தியாவின் வெற்றிக்கு 287 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தென்ஆப்பிரிக்காவின் ஸ்கோர் 209 ரன்னாக இருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. பிலாண்டர் 26 ரன்கள் எடுத்த நிலையில் இசாந்த் சர்மா பந்தில் ஆட்டமிழந்தார். 6-வது விக்கெட்டுக்கு டு பிளிசிஸ் – பிலாண்டர் ஜோடி 46 ரன்கள் எடுத்தது. தென்ஆப்பிரிக்காவிற்கு இந்த ஜோடி அடித்த ரன்கள் மிகமிக முக்கியமானதாக அமைந்தது. கடைசி விக்கெட்டாக நிகிடி 1 ரன் எடுத்த நிலையில் அஸ்வின் பந்தில் ஆட்டமிழக்க தென்ஆப்பிரிக்கா 91.3 ஓவரில் 258 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இந்திய அணி சார்பில் மொகமது ஷமி 4 விக்கெட்டும், பும்ரா 3 விக்கெட்டும், இசாந்த் சர்மா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
முதல் இன்னிங்சில் 28 ரன்கள் முன்னிலைப் பெற்றதுடன் தென்ஆப்பிரிக்கா ஒட்டுமொத்தமாக 286 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதனால் 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என இந்தியாவிற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா பேட்டிங் செய்து வருகிறது.

Leave a Response