சகோதரிக்காக போராடும் “கத்தியை தீட்டாதே புத்தியை தீட்டு”!!

DSK புரொடக்‌ஷன் சார்பில் கோவிலம்பாக்கம் D.சிங்காரம் தயாரிப்பில் ஸ்ரீ கிருஷ்ணா இயக்கும் புதிய திரைப்படம் “கத்தியை தீட்டாதே புத்தியை தீட்டு”.

இத்திரைப்படத்தில் புதுமுக நாயகன் ஆதவராம், கதாநாயகிகளாக பிரியா, மஞ்சு ஆகியோர் நடிக்கிறார்கள். படத்தின் தயாரிப்பாளர் D.சிங்காரம் முக்கியமான கதாபாத்திரத்தில்  நமது பாரம்பரியக் தற்காப்புக் கலையான சிலம்பாட்டக் கலை வீரராக நடித்திருக்கிறார். பிளாரென்ஸ் பெரைரா காவல்துறை அதிகாரி வேடத்தில் நடித்திருக்கிறார்.

சகோதரிக்கு இழக்கப்பட்ட அநீதிக்காக ஒரு சகோதரன் போராடும் கதைக்களமே “கத்தியைத் தீட்டாதே புத்தியைத் தீட்டு” படம். இதன் படப்பிடிப்பு பாண்டிச்சேரி, ஓசூர், பொன்னெரி, கோவிலம்பாக்கம், சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நடந்துள்ளது. இதில் மொத்தம் 6 பாடல்கள் இடம்பெறுகின்றன.

ஒளிப்பதிவு – முரேஷ். இசை – பிரேம். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் ஸ்ரீகிருஷ்ணா. விறுவிறுப்பாகவும், ஆக்‌ஷன் கலந்த செண்டிமெண்டுகளும் நிறைந்த இத்திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.