தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கு கடந்த ஏப்ரல் 2ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. இதில் நடிகர் விஷால் அணி வெற்றி பெற்றது. தற்போது இந்த தேர்தலுக்கு பிறகு முதல் முறையாக தயாரிப்பாளர் பொதுக்குழுக் கூட்டம் வரும் ஞாயிறு அன்று காலை 10:30 மணிக்கு கலைவாணர் அரங்கத்தில் நடைபெறவுள்ளது.
மேற்படி பொதுக்குழுக் கூட்ட சங்க விதியின்படி 21 தினங்களுக்கு முன்பாகவே நிரந்தர உறுப்பினர்களுக்கு, தபால் மூலம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது என்றும். அத்துடன் சங்க விதியில் சில மாற்றங்கள் செய்து பழைய மற்றும் மாற்றப்பட்ட புதிய விதிகள் மாற்றங்களையும் கருத்தில் கொண்டு 1211 உறுப்பினர்களுக்கும் கடிதம் மூலம் தெரியப்படுத்தி உள்ளனர் நிர்வாகிகள்.
மேலும் கடந்த 7 ஆம் தேதி அன்று சங்க உறுப்பினர்கள் சிலர் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி பொதுக்குழுக் கூட்டம் நடைபெறக் கூடாது என கூறி தடை உத்தரவு கோரியுள்ளார்கள். ஆனால் நீதிபதி கார்த்திகேயன் மனுவை நிராகரித்து விட்டார். அத்துடன் மேற்படி பொதுக்குழுவில் கூட்ட நடவடிக்கையை பார்வையிட கண்காணிப்பாளர் ஓய்வுபெற்ற முன்னாள் நீதிபதி ராமநாதனை நியமித்துள்ளார்கள்.
நாங்கள்தான் பொதுக்குழு நடத்த ஏற்பாடுகள் செய்துவிட்டதால். ஏற்கனவே நீதிபதி கார்த்திகேயன் கூறிய ஆணையை ஏற்று நீதிபதி ராமநாதன் பார்வையில் பொதுக்குழு நடைபெற உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. எங்களுக்கு பொதுக்குழுவை நடத்துவதில் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை என்பதையும் இதன் வாயிலாக தெரிவித்து கொள்கிறோம். என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.