ஆர்.கே.நகர் இடைதேர்தல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது!

Royapuram005._L_styvpf

தேர்தல் நடத்தும் அதிகாரியாக ஆதி திராவிடர் நலத்துறை இணை இயக்குனர் கே.வேலுச்சாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

தண்டையார்பேட்டையில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் டிசம்பர் 4-ந்தேதி வரை தினமும் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் டிசம்பர் 5-ந்தேதி பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்படும்.

மனுக்களை திரும்ப பெற 7-ந்தேதி கடைசி நாளாகும். 21-ந்தேதி வாக்குப்பதிவும், 24-ந்தேதி ஓட்டு எண்ணிக்கையும் நடைபெறுகிறது.

ஓட்டுப்பதிவு காலை 8 மணி முதல் மாலை 5 வரை நடைபெறுகிறது.

rkpolice

வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியதை தொடர்ந்து மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. இன்று அரசியல் கட்சிகள் எதுவும் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது.

இந்த முறை தேர்தலை நியாயமாக நடத்த தேர்தல் ஆணையம் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே வீடு வீடாக பிரசாரம் செய்ய வேண்டும், தெருக்களில் தேர்தல் பணிமனைகள் அமைக்கக் கூடாது, வெளி வாகனங்கள் தொகுதிக்குள் நுழையக் கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

r-k-nagar-e1511670505528

இது தவிர தெருக்களிலும் வீடியோ கேமராக்கள் பொருத்தப்படுகின்றன.

தேர்தல் பணிகளில் துணை ராணுவ படையினரை முழுமையாக ஈடுபடுத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

தேர்தல் விதி மீறல், பணப்பட்டுவாடா குறித்து புகார் தெரிவிக்க சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் கூடுதல் கமி‌ஷனர் ரவி தலைமையில் கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்பட்டுள்ளது.

Leave a Response