ஆர்.கே.நகர் இடைதேர்தல்- அதிமுக வேட்பாளர் தேர்வு செய்வதில் குழப்பம்!

rk-nagar-600

ஓராண்டுக்குப் பின்னர் ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத் தேர்தல் டிசம்பர் 21-ந் தேதி நடைபெறுகிறது. இத்தொகுதியில் திமுக வேட்பாளராக மருது கணேஷ் அறிவிக்கப்பட்டுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் கலைக்கோட்டுதயம் மீண்டும் போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். அதிமுக(அம்மா) கட்சியின் வேட்பாளராக தினகரன் போட்டியிட இருக்கிறார்.

திமுக வேட்பாளருக்கு காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீ, மனித நேய மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த நிலையில் இரட்டை இலை சின்னத்தை மீட்டிருக்கும் அதிமுகவின் வேட்பாளர் யார் என்பதில் குழப்பம் நீடிக்கிறது.

admk

கடந்த முறை போட்டியிட்ட மதுசூதனன் மீண்டும் போட்டியிட விரும்புகிறார். ஆனால் ஓபிஎஸ் அணியிலேயே கே.பி. முனுசாமி போட்டியிட முயற்சிக்கிறார்.

எடப்பாடி பழனிச்சாமி அணியோ புதியதாக ஒருவரை நிறுத்தலாமா என யோசித்து வருகிறது. இந்த நிலையில் நாளை காலை அதிமுக தலைமையகத்தில் ஆட்சி மன்ற குழுக் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்துக்குப் பின் அதிமுக வேட்பாளர் யார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

Leave a Response