சின்னம் கிடைத்தபின் முதல் விழா, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா சிறப்பு அஞ்சல் அட்டை வெளியீடு! – எடப்பாடி மகிழ்ச்சி!

1a0d03b36ca253b2f412324ff772ca03

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்கள் தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் கொண்டாடப்பட்டு வருகிறது. மதுரையில் தொடங்கிய கொண்டாட்டம் இதுவரை 25 மாவட்டங்களில் நடந்து முடிந்து 26வது மாவட்டமாக ராமநாதபுரம் பட்டிணம் காத்தான் ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான மேடையில் நடைபெற்று வருகிறது.

 

10 ஆயிரம் பேர் அமரக் கூடிய பிரம்மாண்டமான பந்தலில் இரவைப் பகலாக்கும் மின்னொளியில் மாலை 3.30 மணிக்கு விழா ஆரம்பமானது. தமிழக சட்டப் பேரவைத் தலைவர் தனபால் தலைமையில் நடைபெற்று வரும் இந்த விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது அமைச்சரவை சகாக்களுடன் இணைந்து 161 கோடியே 20 லட்சத்து 13 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 26,849 நபர்களுக்கு வழங்கினார். மேலும், 81 கோடியே 9 லட்சம் மதிப்பிலான 135 கட்டங்களை பல்வேறு துறைகளின் பயன்பாட்டிற்காக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு திறந்து வைத்தார். அத்தோடு, இராமநாதாரம் மாவட்டம் கீழக்கரை வட்டாட்சியர் அலுவலக கட்டடம், மற்றும் வட்டாட்சியருக்கான குடியிருப்புக் கட்டடம் 2 கோடியே 61 லட்சம் மதிப்பிலான பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

bcd4153fad2eb0bc306743937b01536c

மேடையில் முதல்வர் மற்றும் தமிழக அமைச்சர்கள் எம் ஜி ஆர் மற்றும் ஜெயலலிதா திருவுருவப் படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதனைத்தொடர்ந்து எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா சிறப்பு அஞ்சல் அட்டை வெளியிடப்பட்டது.

 

விழாவில் பேசிய துணைமுதல்வர் பன்னீர்செல்வம் “தேசியத்தையும் தெய்வீகத்தையும் இரு கண்களாகக் கொண்டு இமயத்தை விட உயர்ந்த மனதைக் கொண்ட பசும்பொன் திருமகனார் பிறந்த மாவட்டம் இது. ஏ.பி.ஜே அப்துல் கலாமை இந்திய திருநாட்டிற்கு அர்ப்பணித்த மாவட்டம் ராமநாதபுரம் மாவட்டம். தொண்டர்களின் உயர்வே தனது உயர்வு என வாழ்ந்தவர் எம் ஜி ஆர். இன்று அம்மாவின் நல்லாட்சி தமிழகத்தில் நடைபெறுகிறது. அம்மாவின் சிந்தனைகளாக நல் திட்டங்களாக அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு செய்து வருகிறது. இரட்டை இலைச் சின்னம் அம்மாவால் ஒதுக்கப்பட்ட குடும்பத்தினர் கைகளில் கிடைக்காமல் பாதுகாக்கப்பட்டு இருக்கிறது.

5b62c433-87ca-460a-84d9-63ea6b565ed2

அம்மாவின் உண்மைத் தொண்டர்களின் கைகளில் இரட்டை இலைச் சின்னம் கிடைத்திருக்கிறது . இரட்டை இலையை மீட்டுக் கொண்டு வரும் பணியில், கழகத் தொண்டர்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டதால் தான் இரட்டை இலை கிடைத்தது. இந்த மாவட்டத்தில் உள்ள நூற்றுக்கணக்கான கண்மாய்களுக்கு வைகை ஆற்றிலிருந்து நீர் பெற்று விவசாயம் நடக்கிறது. இராமேஸ்வரம் கோயில், ஏர்வாடி தர்ஹா , தேவிப்பட்டணம், தனுஷ்கோடி என ஆன்மீகத் தலங்கள் நிறைந்த மாவட்டம். கிறித்துவர்களும், முஸ்லீம்களும், இந்துக்களும் மத நல்லிணக்கத்தோடு வாழும் மாவட்டம்” என்று பேசினார்.

 

அவரை தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்..

 

“வானம் பார்த்த பூமியான மேட்டு மண்ணை செப்பனிட்டு நெல் உள்ளிட்ட உணவுப் பயிர்களை விவசாயம் செய்யும் மாவட்டம் இது. இந்த மாவட்டத்தில் 3500 கோடி ரூபாய் மீன் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தமிழகத்தில் 26 சதவீத மீன்கள் இந்த மாவட்டத்தில் இருந்து கிடைக்கின்றன. ராமநாதபுரம் மாவட்டத்தை தனி மாவட்டமாக 1985ல் எம் ஜி ஆர் தான் அறிவித்தார். அப்துல் கலாம் பிறந்த சரித்திர மண் இந்த மாவட்டம். 1.30 ஏக்கர் நிலத்தை அவரது நினைவிடத்திற்காக அம்மா அவர்கள் பேய்க் கரும்பில் வழங்கினார்கள்” என்றார்.

Leave a Response