இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே டெல்லியில் இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். டெல்லியில் நேற்றுப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய அவர், இன்று வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜை, சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளில் இந்திய அரசின் உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்கள், மீனவர் பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இலங்கை கடற்படை தமிழ்நாட்டு மீனவர்கள் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்துவதையும், துன்புறுத்துவதையும் வாடிக்கையாக வைத்திருக்கும் நிலையில், இலங்கை பிரதமருடான இந்தச்சந்திப்பில் பேசப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, நேற்று ரணில் விக்கிரமசிங்கே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மன்மோகன் சிங் ஆகியோரைச் சந்தித்து ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.