கொடநாடு க்ரீன் டீ எஸ்டேட்; வருமானவரி சோதனை! சிக்கிய ஆதாரம்!

green t
கொடநாடு க்ரீன் டீ எஸ்டேட்டில் வருமானவரி சோதனையில் ஆதாரம் சிக்கியது. க்ரீன் டீ எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் நேற்று வருமானவரித்துறை துருவித்துருவி விசாரணை நடத்தினர்.

விடிய விடிய நடராஜனிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இன்று மீண்டும் க்ரீன் டீ எஸ்டேட்டுக்கு நடராஜனை அழைத்து வந்து விசாரணை நடத்தினர். க்ரீன் டீ எஸ்டேட் ஊழியர்கள் மூலம் கருப்பு பணத்தை வெள்ளையாக்கியது தெரியவந்துள்ளது. க்ரீன் டீ எஸ்டேட்டின் 800 தொழிலார்கள் பெயரில் வங்கியில் தலா ரூ.2 லட்சம் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது தொழிலார்கள் மூலம் கருப்பு பணம் வெள்ளையானது. கொடநாடு அருகே ஈளாடாவில் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

Leave a Response