நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரதமர் மோடி சென்னைக்கு வருகை தந்துள்ளார். காலை 9. 30 மணியளவில் விமான நிலையம் வந்திறங்கினார். பிரதமரை தேசிய செயலர்கள் முரளிதரராவ், எச்.ராஜா, பா.ஜ., தமிழக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், இல.கணேசன் எம்.பி., பாரிவேந்தர், மற்றும் தமிழக அமைச்சர்கள் பலர் வரவேற்றனர்.
சென்னை எம்ஆர்சி நகரில் நடைபெற உள்ள திருமண விழாவில் மோடி பங்கேற்கிறார்.
இதனைத் தொடர்ந்து சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெறும் தினத்தந்தி நாளிதழின் பவளவிழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.
இந்த இரு நிகழ்ச்சிகளையும் நிறைவு செய்த பின்னர் திமுக தலைவர் கருணாநிதியை கோபாலாபுரம் இல்லத்தில் மோடி பிற்பகல் 12.30 மணிக்கு சந்திக்கிறார்.
பிரதமர் மோடியின் சென்னை வருகையையொட்டி சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.