ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவை பாஜகதான் இயக்குவதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. ஆனால் தமிழக பாஜக தலைவர்கள் அதிமுக அரசை விமர்சித்து கொண்டே இருக்கின்றனர்.
இருப்பினும் ஜெயலலிதா எதிர்த்த மத்திய அரசின் அத்தனை திட்டங்களுக்கும் தமிழக அரசு ஒப்புதல் தெரிவித்திருக்கிறது. தமிழக முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோர் நினைத்த நேரத்தில் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்திக்கின்றனர்.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி போன்றவர்கள், எல்லாம் மோடி பார்த்துக் கொள்வார் என பகிரங்கமாகவே பொதுமேடைகக்ளில் பேசிவருகின்றனர். இதனை உறுதிப்படுத்தும் வகையில் அதிமுக எம்.எல்.ஏ. கனகராஜ் இன்று பேட்டியளித்துள்ளார்.
அவர் அளித்துள்ள பேட்டியில்:-
இரட்டை இலை- தாமரை கூட்டணி விரைவில் உதயமாகும்; இரட்டை இலையும் தாமரையும் இணைந்து செயல்பட வேண்டும் என்பது தமிழக மக்களின் விருப்பம் என கூறியுள்ளார்.