குற்றப்பிரிவு போலீசுக்கு திருவண்ணாமலை நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

nithyananda

திருவண்ணாமலையைச் சுற்றியுள்ள அழகிய மலைப் பகுதியை பௌர்ணமி நாளில் சுற்றி வந்து பக்தர்கள் அருணாச்சலேஸ்வரை வழிபட கிரிவலப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கிரிவலப்பாதையை ஒட்டி அமைந்துள்ள பவழக்குன்று மலையை ஆக்கிரமிக்கும் பணியில் நித்தியானந்தா சீடர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

ஆக்கிரமிப்பு இடத்தில் கான்கிரீட் கொண்டு ஆசிரமம் உள்பட பல்வேறு கட்டிடம் கட்டுவதற்கான பணிகளை செய்யவும் திட்டமிட்டதாக கூறப்படுகிறது.

judgement

இதுகுறித்த வழக்கில் நித்யானந்தா கேவியட் மனுவில் தவறான தகவல் அளித்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே நித்யானந்தா மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க குற்றப்பிரிவு போலீசுக்கு திருவண்ணாமலை நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

Leave a Response