புறநகரங்களுக்கு செல்லும் மின்சார ரயில்களின் வேகம் குறைப்பு!

train5767
சென்னையில் கனமழையால் தண்ணீர் தேங்கியுள்ளதால் புறநகர் மின்சார ரயில்களின் வேகம் குறைக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் சென்னையில் 2 தினங்களாக மாலை நேரத்திற்கு பிறகு வெளுத்து வாங்கிய மழையால் பஸ்நிலையம், விமான நிலையம், ரயில்வே நிலையம் என அனைத்து இடங்களிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் அனைத்து போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து புறநகர் பகுதிகளான தாம்பரம், ஊரப்பாக்கம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட இடங்களுக்கு மின்சார ரயில் சென்று வருகிறது. இந்நிலையில் ரயில் தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் அசம்பாவிதங்கள் எதுவும் நடக்காமல் தடுக்க மின்சார ரயில்களின் வேகம் குறைக்குமாறு ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

Leave a Response