இந்தியா- நியுசிலாந்து டி20 இன்று தொடரை கைப்பற்றுமா இந்தியா!

tas

இந்தியா – நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான டி-20 தொடர் மொத்தம் மூன்று ஆட்டங்களைக் கொண்டது. இதில், இந்தியா 1-0 என முன்னிலை வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இரு அணிகளுக்கு இடையேயான டி-20 தொடரின் இரண்டாவது ஆட்டம் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று நடைபெறுகிறது.

இந்திய அணியைப் பொருத்த வரையில் முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்றிருப்பதால் உத்வேகத்தோடு களமிறங்கும்.

rohi

அணியின் பேட்டிங்கிற்கு தவான், ரோஹித் கூட்டணி உள்ளது. மிடில் ஆர்டரில் கேப்டன் கோலி, எம்.எஸ்.தோனி பலம் சேர்க்கின்றனர்.

நியூஸிலாந்து அணியை பொறுத்தவரையில் ஒருநாள் தொடரை இந்தியாவிடம் இழந்துவிட்டதால், டி-20 தொடரை தக்க வைக்க அந்த அணி கடுமையாக முயற்சிக்கும்.

கடந்த ஆட்டத்தில் முக்கியமான தருணங்களில் ரோஹித் மற்றும் கோலியின் கேட்சுகளை நியூஸிலாந்து ஃபீல்டர்கள் தவறவிட்டது அந்த அணிக்கு பெரும் பாதிப்பாக இருந்தது.

1Kohli-s.

அணியின் பந்துவீச்சை கணக்கில் கொண்டால் பூம்ரா, புவனேஸ்வர் வேகம் காட்டி மிரட்ட வருகின்றனர். சுழற்பந்துவீச்சில் யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அக்ஸர் படேல் பலம் சேர்க்கின்றனர்.

இந்த முறை ஃபீல்டிங்கில் அந்த அணி கவனமுடன் இருக்கும். பந்துவீச்சில் சேன்ட்னர், செளதி, சோதி ஆகியோர் பலம் சேர்ப்பார்கள்.

Leave a Response