இந்து தீவிரவாதத்தை விமர்சித்ததால் உத்தரப்பிரதேசத்தில் நடிகர் கமல்ஹாசன் மீது அம்மாநில போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்து தீவிரவாதத்தை நடிகர் கமல்ஹாசன் விமர்சித்து வார இதழில் கட்டுரை எழுதியிருந்தார். இதற்கு பாஜக உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகள் கமல்ஹாசனுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன.
நடிகர் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் பாஜக தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கமல்ஹாசன் மீது உத்தரப்பிரதேச மாநிலம் பனாரஸ் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதத்துக்கு எதிராக கருத்து தெரிவித்தல், அவதூறாக பேசுதல் ஆகியவற்றுக்காக கமல்ஹாசன் மீது குற்றவியல் சட்ட பிரிவுகள் 500, 511, 298, 295(a), 505(c) ஆகிய 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.