தமிழகத்தின் புதிய, 20-வது ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நாளை பதவியேற்கவுள்ளார். அவருக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி நாளை அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.
இதற்காக அவர் அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து விமானம் மூலம் இன்று மதியம் 1.25 மணிக்கு சற்றுமுன் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அவரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தமிழக டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நாளை (வெள்ளிக்கிழமை) பதவி ஏற்றுக் கொள்கிறார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நாளை காலை 9.30 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கலந்து கொண்டு பன்வாரிலால் புரோஹித்துக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.