டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இது தொடர்பான வழக்கு விசாரணை நாளையே எடுத்துக் கொள்ளப்படும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இப்படி, தமிழக அரசியல் பரபரப்பு உச்சத்தை அடைந்துள்ள நிலையில், தமிழக பொறுப்பு ஆளுநர் இன்று சென்னை திரும்புகிறார்.
இந்த நிலையில் அதிமுக அம்மா அணி துணை பொது செயலாளர் டிடிவி தினகரன், திருச்சியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலையை நன்கு ஆராய்ந்து ஆளுநர் நடுநிலையோடு நல்ல முடிவெடுப்பார். அதற்காக காத்துக் கொண்டிருக்கிறேன் என்றார்.
தவிர, தமிழகத்தை பாதிக்கும் பிரச்சனைகளுக்கு, மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்போம் என்றும் காவல்துறை நடுநிலைமையோடு செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்!