தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ’க்கள் தகுதி நீக்கம் செல்லுமா? செல்லாதா? அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசனை!

EDAPADi

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்றும் அவருக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாகவும், டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர், ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் கடந்த சில வாரங்கள் முன்பு நேரில் சந்தித்து மனு கொடுத்திருந்தனர்.

இதையடுத்து தமிழக அரசியலில் பல்வேறு குழப்பங்கள் உருவானது. எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மனு கொடுத்தது தொடர்பாக செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

டிடிவி தினகரனுக்கு ஆதரவாக இருந்த எம்.எல்.ஏ. ஜக்கையன், முதலமைச்சருக்கு எதிராக மனு கொடுத்ததை திரும்ப பெற்றுக்கொள்வதாக கூறியிருந்தார்.

சபாநயாகர் அளித்த காலக்கெடுவுக்குள் விளக்கம் அளிக்காததால், 18 எம்.எல்.ஏ.க்களையும் கட்சித் தாவல் தடைச்சட்டத்தின்படி தகுதி நீக்கம் செய்து நேற்று தமிழக சட்டப் பேரவை சபாநாயகர் உத்தரவு பிறப்பித்தார். அதை தொடர்ந்து தமிழக அரசியல் நிலவரம் பரபரப்பான நிலையை எட்டியுள்ளது.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள், உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அதில், அதிமுகவில் இருந்து விலகாமலும், வேறு கட்சியிலும் சேராத நிலையில், கட்சி தாவல் தடை சட்டம் செல்லாது என்று அதில் குறிப்பிட்டுள்ளனர்.

18 எம்.எம்.எல்.ஏ.க்கள் நீதிமன்றத்தை நாடியுள்ள இந்த பரபரப்பான சூழ்நிலையில், இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவரது வீட்டில் சி.வி. சண்முகம், தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட மூத்த அமைச்சர்களுடன் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

Leave a Response