ப்ளூவேல் தூண்டியும் உயிர் மீண்ட சிறுவன்; திருப்பூரில் ஆச்சரிய சம்பவம்

thirupoor
கடந்த சில நாட்களாக ப்ளூவேல் தற்கொலை விளையாட்டு குறித்த விழிப்புணர்வு மக்களிடையே பரவியுள்ளதால், ப்ளூவேல் விளையாட்டால் பாதிக்கப்பட்டவர்களை எளிதில் அடையாளம் காண முடிகிறது.

இதன் தொடர்ச்சியாக, தமிழக அரசின் சுகாதரத்துறை அறிவித்துள்ள 104 எண்ணை தொடர்பு கொண்ட திருப்பூரைச் சேர்ந்த 12 வயது சிறுவன் ப்ளூவேல் விளையாட்டில் இருந்து தன்னை காப்பாற்றுமாறு கேட்டுக்கொண்டான்.

பின்னர் அந்த சிறுவனை மீட்டு, இரண்டு மனநல மருத்துவர்கள் மூலம் ஆலோசனை தரப்பட்டு வருவதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

மேலும் அந்த சிறுவனிடம் விசாரணை நடத்திய போது, ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டும், சில டாஸ்கை தன்னால் செய்ய முடிந்தது என்றும் அதன் பிறகு தன்னை தற்கொலை செய்துக்கொள்ள வேண்டும் என ப்ளூ வேல் மிரட்டி வருவதாகவும், அதுமட்டுமில்லாமல் ஒருவேளை தற்கொலை செய்துகொள்ள தயங்கினால் என் குடும்பத்தினரை கொன்றுவிடுவதாகவும் தொடர் மிரட்டல் கொடுத்து வந்ததாக அந்த சிறுவன் கதறி உள்ளான். பின்னர் தற்போது அந்த சிறுவன் இந்த அபாயகரமான எண்ணத்திலிருந்து விடுபட்டு மெல்ல மெல்ல இயல்புநிலைக்கு திரும்புவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்

Leave a Response