நாட்டுக்கே ‘பாடம்’ சொல்லியிருக்கும் மாணவி இறுதி ஊர்வலத்துக்கு தயாராகிறார்!

anitha
நீட் தேர்வு விவகாரத்தால் தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் உடலுக்கு இன்று பிற்பகல் இறுதி சடங்குகள் நடைபெற்று மாலை அவரது உடல் அடக்கம் செய்யப்படும்.

அரியலூரை சேர்ந்த மாணவி பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தும் நீட் தேர்வினால் அவரால் மருத்துவ படிப்பில் சேர இயலவில்லை. இதனால் மனமுடைந்த அனிதா நேற்று தற்கொலை செய்து கொண்டார்.

வீட்டருகே உள்ள திடலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடலுக்கு அரசியல் கட்சிப் பிரமுகர்களும், திரைப்பட பிரபலங்களும் பொதுமக்களுமாக ஏராளமானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்!

இதையடுத்து அவரது உடலுக்கு இன்னும் சற்று நேரத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர். சடங்கு சம்பிரதாயங்கள் முடிந்ததும், தன் தற்கொலையால் நாட்டுக்கே பாடம் சொல்லியிருக்கும் அனிதா இறுதிப் பயணத்தை துவங்குகிறார்!

Leave a Response