70 குழந்தைகள் பலியான சம்பவம்; தலைமறைவான டாக்டர் கைது!

Kafeel-Khan-from-Gorakhpur_SECVPF
உத்தரப்பிரதேசம் மாநிலம் கோரக்பூரில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த சில வாரங்களுக்கு முன் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியது!

மேற்கண்ட சம்பவம் தொடர்பாக சிறப்பு விசாரணைக்குழு விசாரணை நடத்தி வருகிறது.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய குழந்தைகள் மருத்துவர் கபீல் கான் உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை முடுக்கிவிடப்பட்டிருந்தது.

மருத்துவமனைமுதல்வர் ஆர்.கே மிஸ்ரா மற்றும் கபீல் கான் உள்பட 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தனர். வழக்குப் பதிவு செய்யப்பட்டதில் இருந்து கபீர்கான் தலைமறைவாகி விட்டதாக சொல்லப்பட்டது. அவரை தீவிரமாக தேடி வந்த போலீசார் இன்று காலை கைது செய்துள்ளனர்.

Leave a Response