இந்தியா-இலங்கை கிரிக்கெட் போட்டி- வெற்றியை நெருங்கும் இந்தியா!

Ind-vs-SL-380

இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்திய அணி முதல் 3 ஆட்டங்களில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றி விட்டது.

இந்த நிலையில் இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான 4வது ஒரு நாள் போட்டி கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங்கை தேர்ந்தெடுத்து தற்போது இந்திய அணி 38 ஓவர் முடிவில் 279 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டை இழந்து விளையாடி வருகிறது. அதிகபட்சமாக விராட் கோலி 96 பந்துகளில் 131 எடுத்து ஆட்டம் இழந்தார். அவருடன் சிறப்பாக விளையாடி ரோகித் சர்மா 88 பந்துகளில் 104 ரன்கள் ஆட்டம் இழந்தார்.

தொடரை கைப்பற்றிவிட்டதால் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் இந்திய அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டஉள்ளன. சர்துல் தாக்கூர் (முதல் போட்டி), குல்தீப் யாதவ், மனிஷ் பாண்டே ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு, சஹல், புவனேஸ்வர்குமார், ஜாதவ் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

மானத்தை காப்பாற்ற போராடிக்கொண்டிருக்கும் இலங்கையும், 3 மாற்றங்களை செய்துள்ளது. ஹசரங்கா, முனவீரா, புஸ்பகுமாரா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடைசி இருவருக்கும் இதுதான் முதல் போட்டியாகும். கப்புகதெரா, சண்டிமால், சமீரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது

Leave a Response