பான், குட்கா விவகாரம்… சட்டசபை உரிமைக்குழு நோட்டீஸ்; திமுக ஐகோர்ட்டில் முறையீடு!

High-Court
பான், குட்கா விவகாரத்தில் சட்டசபை உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பியதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் முறையீடு செய்துள்ளது. தடை செய்யப்பட்ட, ‘குட்கா’ போன்ற புகையிலை பொருட்களை, சட்டசபைக்கு எடுத்து வந்தது தொடர்பாக, ஸ்டாலின் உட்பட, 21 தி.முக., – எம்.எல்.ஏ.,க்களிடம் விளக்கம் கேட்டு, ‘நோட்டீஸ்’ அனுப்ப, சட்டசபை உரிமைக் குழு முடிவு செய்துள்ளது.

இந்த நோட்டீசை எதிர்த்து திமுகவின் நீலகண்டன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த குழுவின் விசாரணைக்கு முன்னர், வழக்கை விசாரிக்க வேண்டும் என கோரிக்கைவிடப்பட்டது. இதை தொடர்ந்து இந்த வழக்கு வரும் 7 ம் தேதி விசாரணை நடத்தப்படும் என ஐகோர்ட் அறிவித்துள்ளது.

Leave a Response