ராம் ரஹீமுக்கு 10 ஆண்டு தண்டனை! நீதிபதி ஜெஹ்தீப் சிங் அறிவிப்பு

ram1

தேரா சச்சா அமைப்பின் தலைவர் ராம் ரஹிம் மீதான பாலியல் வழக்கில் இன்று தண்டனை விவரம் அறிவிக்கப்படுவதையடுத்து பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காக சிபிஐ கோர்ட் நீதிபதியான ஜக்திப் சிங், பஞ்ச்குலா கோர்ட்டில் வாதத்தை நடத்தாமல், ராம் ரஹிம் அடைக்கப்பட்டுள்ள ரோத்தகி மாவட்ட சிறையிலுள்ள நூலகத்தை தற்காலிக நீதிமன்றமாக மாற்ற உத்தரவிட்டார்.

நீதிபதி ஜக்திப் சிங் சாலை மார்க்கமாக வருவது பாதுகாப்பு இல்லை என கருதி ஹெலிகாப்டர் மூலம் சிறை வளாகத்திற்கு நீதிபதியும் அவரின் உதவியாளர்களும் வந்தனர்.

இதையடுத்து இரு தரப்பு வழக்கறிஞர்களையும் தலா 10 நிமிடங்களுக்குள் வாதிடுமாறு நீதிபதி கேட்டுக்கொண்டார். முதலில் வாதத்தை தொடங்கிய சிபிஐ தரப்பு, ராம் ரஹிமுக்கு அதிகபட்ச தண்டனையான 10 வருடங்கள் சிறை தண்டனை வழங்க கேட்டுக்கொண்டது.

அதேநேரம், ராம் ரஹிம் தரப்பு வழக்கறிஞர் கார்க் நர்வானா, தனது கட்சிக்காரர் வயது முதிர்வை கருத்தில் கொண்டு சிறை தண்டனையை குறைக்க வேண்டும் என வாதிட்டார்.

அதன் பின் நீதிபதி தீர்ப்பு வழங்கினர்:-

பாலியல் வன்கொடுமை வழக்கில் ராம் ரஹீம் சிங்கிற்கு 10 ஆண்டு சிறை தண்டனை அளிக்கப்பட்டது. 14 ஆண்டு விசாரணைக்கு பிறகு குற்றவாளியாக ராம் ரஹீம் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Response