பதக்கங்கள் வென்ற வீராங்கனைகளுக்கு மோடி வாழ்த்து!

modi
உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஸ்காட்லாந்தில் நடைபெற்றுவந்தது. அந்தப் போட்டியில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டிக்கு தேர்வாகி வந்ததன் மூலம் பி.வி.சிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். இந்த சாம்பியன் ஷிப் போட்டியில் ஏற்கெனவே சாய்னா நேவால் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். இந்த இரு பெண் வீராங்கனைகளுக்கும் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், பிரதமர் மோடி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

குடியரசுத்தலைவர் ராம் நாத் கோவிந்த் ட்விட்டர் பதிவில், ‘உங்களாலும், உங்களுடைய பதக்கத்தாலும் இந்தியா பெருமை கொள்கிறது’ என்று பதிவிட்டுள்ளார். பிரதமர் மோடியின் ட்விட்டர் பதிவில், ‘சிறப்பாக விளையாடினீர்கள் பி.வி.சிந்து. உலக பேட்மின்டன் இறுதிப் போட்டியில் உங்களுடைய விளையாட்டை பார்த்து பெருமைகொள்கிறோம்’ என்று பதிவிட்டுள்ளார். தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் ட்விட்டர் பதிவில், ‘உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் வென்ற பி.வி.சிந்து மற்றும் சாய்னா நேவாலுக்கு வாழ்த்துகள். உங்களை நினைத்து பெருமைகொள்கிறோம்’ என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Response