ஜெயலலிதா, தினகரன் பேனர் கிழிப்பு! அடையாறில் பதற்றம்

dinakaran banner

டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள ரிசார்ட் முன்பு ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் இரண்டு நாட்களுக்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது டிடிவி தினகரனின் உருவப்படத்தை அவர்கள் எரித்தனர்.

இதேபோல், டிடிவி தினகரனின் ஆதரவாளர்கள் சிலர், ஓ.பி.எஸ். உருவப்படத்தை எரித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இந்த நிலையில் சென்னை, அடையாறில் உள்ள டிடிவி தினகரனின் வீடு அருகே அவருடைய ஆதரவாளர்கள் பேனர்கள் வைத்திருந்தனர். அதில் ஜெயலலிதா, சசிகலா, தினகரன் ஆகியோர் புகைப்படங்கள் அடங்கியிருந்த பேனரில் இன்று அதிகாலையில் தினகரனின் புகைப்படத்தை மட்டும் யாரோ மர்மநபர்கள் கிழித்து விட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரியில் தங்க வைக்கப்பட்டுள்ள தனது ஆதரவு எம்எல்ஏக்கள் டிடிவி தினகரன் இன்று சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Response