செல்பி மோகம் உயிர் தப்பிய இளைஞர்!

selfi

நேற்று இரவு 10மணியளவில் சென்னை அடையாறு கூவம் ஆற்றின் மேம்பாலத்தில் இருந்தபடி நண்பர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டிருந்த சூளைமேட்டை சேர்ந்த சீனிவாசன் என்ற இளைஞர் திடீரென பின்புறம் இருந்த கூவம் ஆற்றில் விழுந்தார் உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்து அவரை மீட்டு ஆர்.ஏ.புறம் காவல் நிலையத்திற்கு கொண்டுவந்தனர்.

இதுகுறித்து போலீசாரிடம் கேட்டபோது அதிர்ஷ்டவசமாக அவர் விழுந்த இடத்தில் ஆழம் குறைவாக இருந்த காரணத்தினால் உயிருக்கு எந்த பாதிப்பு இல்லாமல் சுலபமாக காப்பாற்ற முடிந்ததாகவும் மேலும் சீனிவாசன் மீது வழக்கு ஏதும் பதியாமல் அவருக்கு அறிவுரை வழங்கி அவரை அனுப்பிவைத்தனர் தெரிவித்தனர்.

Leave a Response