ஏர் இந்தியா நிறுவனத்தின் புதிய விமான சேவை வருகிற 30-ந்தேதி தொடங்குகிறது!

air

பெரிய நகரங்களுடன் சிறிய நகரங்களை விமான சேவை மூலம் இணைக்க வேண்டும், அனைத்து தரப்பு மக்களும் பயணம் செய்யும் வகையில் நியாயமான கட்டணத்தில் விமானங்கள் இயக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. இதையடுத்து ஏர் இந்தியாவின் துணை நிறுவனமான ‘அலையன்ஸ் ஏர்’ நிறுவனத்தின் சார்பில் சென்னையில் இருந்து திருச்சி, கோவை, மதுரை, விஜயவாடா ஆகிய நகரங்களுக்கு வருகிற 30-ந் தேதி முதல் தினசரி புதிய விமான சேவையை தொடங்குகிறது.

இந்த விமான சேவையில், சிறிய ரக விமானம் இயக்கப்பட உள்ளது. இதில் 70 பயணிகள் பயணம் செய்ய முடியும்,

ஒரு நாளைக்கு ஒரு நகரத்திற்கு ஒரு முறை மட்டுமே விமான சேவை அளிக்க இயலும்.

மேலும் சிறிய ரக விமானங்கள் வந்தபின்னர் காலை, மாலை என தினமும் 2 முறை விமான சேவை வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது.

இதுதவிர தூத்துக்குடி, ஐதராபாத் போன்ற நகரங்களுக்கும் விமான சேவை விரிவுபடுத்தப்படும். முன்பதிவு செய்பவர்களுக்கு கட்டண சலுகை வழங்கப்படும். பயணம் செய்ய உள்ள தினத்தில் கட்டணம் சற்று அதிகமாக இருக்கும். பயணிகளின் ஆதரவை பொறுத்தே விமான சேவை அதிகரிப்பது பற்றி முடிவு செய்யப்படும் என தென்மண்டல ஏர் இந்தியா விமான நிறுவன இயக்குனர் கேப்டன் அருள்மணி தெரிவித்துள்ளார்.

Leave a Response