சசிகலாவை நீக்கினால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க முடியுமா ? தினகரன் ஆலோசனை

thinakarn

அதிமுக முன்னால் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் தனது ஆதரவாளர்களுடன் தற்போது ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். சசிகலாவை நீக்கினால் அடுத்த என்ன மாதிரியான சட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவது என அவர் விவாதித்து வருவதாக தெரிகிறது. தினகரனுக்கு ஆதரவாக இருக்கும் 20 எம்.எல்.ஏக்களில் 17 எம்.எல்.ஏக்கள் எந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். இவர்கள் தினகரனுக்கு ஆதரவாக செயல்படுவார்கள் எனத் தெரிகிறது.

தற்போது எடப்பாடி பழனிச்சாமி அணி, ஓ.பி.எஸ் அணி பக்கம் உள்ள எம்.எல்.ஏக்கள் மற்றும் சபாநாயகரோடு சேர்த்து 119 எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள். ஆட்சி அமைக்க 117 எம்.எல்.ஏக்கள் வேண்டும். அந்த 119 எம்.எல்.ஏக்களில் 3 பேர் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களாக இருப்பவர்கள். எனவே, அவர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு அளிக்கும் ஆதரவை வாபஸ் பெற்றால் ஆட்சி கவிழும் நிலை ஏற்படும் எனத் தெரிகிறது.

Leave a Response