முதல்வர் பழனிசாமி விழாவில் கிராம உதவியாளர்கள் (VAO) சலசலப்பு

edappadi-palanisamy2
எம்ஜிஆர் நூற்றாண்டு விழா மேடையிலேயே போராட்டம் நடத்தியதால் முதல்வர் அதிர்ச்சி அடைந்துள்ளார். கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்று முதல்வர் முன் வி.ஏ.ஓக்கள் போராட்டம் நடத்தினர்.

சென்னை கலைவாணர் அரங்கில் முதல்வர் பழனிசாமி விழாவில் வருவாய் கிராம உதவியாளர்கள் கோஷம் எழுப்பியுள்ளனர். காலமுறை ஊதிய உயர்வு தொடர்பாக முதல்வர் அறிவிப்பு வெளியிடாததால் உதவியாளர்கள் முழுக்கமிட்டனர். விழா முடிந்து முதல்வர் புறப்படும் போது கிராம உதவியாளர்கள் (VAO) சலசலப்பில் ஈடுப்பட்டனர்.

Leave a Response