பாண்டிச்சேரியில் இருந்து ஹைதராபாத்,விஜயவாடாவிற்கு விமானம் சேவை தொடங்க இருக்கிறது என்று பாண்டிச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பாண்டிச்சேரியில் வரும் 16ம் தேதி விமான போக்குவரத்து தொடங்குகிறது என்றும் சரக்குகளை கையாள சென்னை துறைமுகத்துடன் ஒப்பந்தம் போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறினார்.