சாத்தானுக்கு வெடியா !

saththan
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள ஏ.மோட்டூரில் ஆடி அமாவாசையை முன்னிட்டு வேடியப்பன் கோயில் சுவாமி சிலையை பக்தர்கள் ஊர்வலமாக கொண்டுசென்று விநாயகர் கோயிலில் வைத்து வழிபடுவார்கள். இந்த திருநாளில் பேய் ஓட்டும் நிகழ்ச்சியும் நடக்கும். பேயை விரட்ட அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள் வெடிக்கப்படும்.

இந்த ஆண்டு நடைபெற்ற ஆடி அம்மாவாசைக்கு வேடியப்பன் கோயில் பேய் ஓட்டும் நிகழ்விற்காக கதனை வெடிகள் கோயில் முன் குவிக்கப்பட்டிருந்தன. அப்போது அதன் அருகே ராக்கெட் வெடியை சிலர் வெடித்தபோது, அதன் தீப்பொறி வெடிக்குவியலில் விழுந்துள்ளது. குவிந்து கிடந்த வெடிகள் அனைத்தும் சரவெடி போல வெடித்துச் சிதறியதில் விநாயகர் கோயில் முற்றிலும் தரைமட்டமானது.

இந்த வெடிப்பினால் ஏற்பட்ட இடிபாட்டில் சிக்கிய பக்தர்கள் எட்டு பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக அப்பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Response