தமிழகத்தில் சென்னையில் முறையின்றி காவல்துறை வாகங்களில் பொருத்தப்பட்ட நீலநிற சுழல் விழக்குகளை அகற்ற வேண்டும் என்று டிஜிபி க்கு உள்துறை செயலர் கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக தமிழக உள்த்துறை செலர் நிரஞ்சன் மார்டி, தமிழக காவல்த்துறை தலைவர் ராஜேந்திரனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது சென்னையில் சில காவல் துறை வாகனங்களில் அனுமதியின்றி நீல நிற சுழல் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இது மத்திய அரசின் உத்தரவை மீறும் செயலாகும். எனவே உடனடியாக இந்த நீல நிற சுழல் விளக்குகளை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று கடிதத்தில் கூறியுள்ளார்.