தண்டனை பெற்ற எம்.பி, எம்.எல்.ஏக்கள் தேர்தலில் போட்டியிட தடை இல்லை தேர்தல் ஆணையம் அதிரடி!!

election

தண்டனை பெற்ற எம்.பி, எம்.எல்.ஏக்கள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை கோரும் வழக்கில் தேர்தல் ஆணையம் அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளது.

குற்றவழக்கில் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்க வேண்டும் பாஜகவின் அஸ்வினி உபாத்யாயா தொடர்ந்த வழக்கில், உச்சநீதிமன்றத்தில் தலைமைத் தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

இதில்,தண்டனை பெற்ற எம்.பி, எம்.எல்.ஏக்கள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்க தேவையில்லை. குற்றப்பின்னணி உள்ளவர்களை தேர்தலில் போட்டியிட சட்டப்படி தடை விதிக்கலாம் என தேர்தல் ஆணையம் அதிரடியாக பதிலளித்துள்ளது.

Leave a Response