நெல்லை மாவட்டத்தில் இருக்கும் வேந்தன் குளத்தில் உள்ள புதிய பேருந்து நிலையத்திற்கு செல்லும் வழியில் இந்த பிரம்மாண்ட சரவணா ஜவுலிக்கடை அமந்துள்ளது. விதியை மீறி விவசாய நிலத்தில் இந்த ஜவுலிகடையின் கட்டிடம் கட்டப்பட்டதாக அந்த சரவணா ஜவுளிகடையின் மீது பொது நலவழக்கு நெல்லையை சேர்ந்தவரால் மதுரை கிளை நீதிமனறத்தில் தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம், நெல்லையில் செயல்பட்டு வந்த சரவணா ஸ்டோர்ஸ் இன்று மதியம் 2.30 மணிக்குள் மூடப்பட வேண்டும் என உத்தரவிட்டது. மேலும், அந்த கடைக்கு சீல் வைக்க வேண்டும் என நெல்லை மாவட்ட ஆட்சியருக்கும் உத்தரவிட்டது.