மக்கள் தொகையை குறைக்க ராஜஸ்தான் அரசின் அதிரடி அறிக்கை!!

saree

உலக மக்கள் தொகையில் சீனாவுக்கு அடுத்த நிலையில் இந்தியா உள்ளது. விரைவில் இந்தியா சீனாவை முந்திக்கொண்டு முதல் இடத்தைப் பிடிக்கும் என்று ஐ.நா அறிவித்துள்ளது. இந்நிலையில், மக்கள் தொகையை குறைக்க ராஜஸ்தான் அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் குடும்ப கட்டுப்பாடு செய்பவர்களுக்கு 4ஜி போன் மற்றும் சேலைகள் பரிசாக வழங்கப்படும்.

தற்போது இந்த திட்டத்தை மாநில முழுவதும் செயல்படுத்த அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டமும் தங்கள் இலக்கை அடைய போட்டிப் போட்டு செயல்பட்டு வருகிறது. மக்கள் தொகையை குறைக்க இது போன்ற அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஜெய்ப்பூர் மாவட்டத்தில் இதுவரை 8 ஆயிரத்து 410 பேர் குடும்பக் கட்டுப்பாடு செய்துள்ளதாக அந்த மாநில அரசு கூறப்பட்டுள்ளது.

Leave a Response