தமிழக சட்டசபை முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின்…

stalin 2
தமிழகத்தில் ஆட்சி அமைக்க அதிமுக எம்.எல்.ஏ.,க்களுக்கு சசிகலா தரப்பில் லஞ்சம் கொடுத்ததாக டைம்ஸ் நவ் வீடியோ ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டு இருந்தது. இதை இன்று சட்டசபையில் விவாதிக்க திமுக செயல் தலைவர் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார். ஆனால், இதை ஏற்றுக் கொள்ள சபாநாயகர் மறுத்துவிட்டார்.

இதனால் திமுகவினர் சபாநாயகருக்கு எதிராக கூச்சல், குழப்பம் ஏற்படுத்தினர். இதையடுத்து திமுக உறுப்பினர்கள் அனைவரும் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இவர்கள் அனைவரும் ஸ்டாலின் தலைமையில் ராஜாஜி சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த இடத்தில் பதட்டம் நிலவியது. போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து, ஸ்டாலின் உள்பட திமுக உறுப்பினர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு ராயபுரத்தில் உள்ள திருமண மண்டபத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். இவர்கள் அனைவரும் இன்று மாலை விடுவிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது. சட்டசபையில் திமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டதை கண்டித்து இன்று மாலை கவர்னரை சந்தித்து திமுக மனு கொடுக்கலாம் என்று கூறப்படுகிறது.

Leave a Response