பிறந்தவுடன் ஆச்சர்யமுட்டிய குழந்தை

-kulanthai
பிறந்து ஒரு மணி நேரத்தில் படு ஸ்டைலாக படுத்திருக்கும் இந்த குழந்தையின் அறிய புகைப்படம் இந்திய டுவிட்டர் பக்கங்களில் வைரலாக பரவி தற்பொழுது டிரண்டாகி வருகின்றன.

இந்த குழந்தை பிறந்து ஒரு மணி நேரத்தில் தலைக்கு தனது கையை கொடுத்து படு ஸ்டைலாக குழந்தை படுத்திருக்கும் புகைப்படம் பார்ப்பவர்களை மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தப் புகைப்படத்தை பார்ப்பவர்கள் அனைவரும் ரீ டுவீட் செய்து வருகின்றனர். இந்தக் குழந்தை எந்த நாட்டில், எங்கு, எப்போது, யாருக்குபிறந்தது, எந்த மருத்துவமனையில் பிறந்தது போன்ற எந்த விவரங்கள் எதுவும் இல்லை.

பிறக்கும்போதே ஞானத்துடனும், புதிய சிந்தனைகளுடனும்,பிறந்த இந்த குழந்தை எப்படி இந்த உலக மக்களை சமாளிப்பது இவர்களுடன் எப்படி பயணம் செய்யபோகிறோம் என்று ஆழ்ந்த சிந்தனையில் இருப்பது போன்று ”போஸ்” கொடுத்து இருப்பது பார்ப்பவர்களுக்கு ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.

Leave a Response