ஜாமீனில் வெளிவந்த டிடிவி. தினகரனால் தமிழகத்தில் ஆட்சி களையுமா…

edapad-palanisamy
தமிழகத்தில் சில மாதங்களுக்கு முன் இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி தினகரன் சிறைக்கு சென்று, தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்தநிலையில் அவர் வெளியில் வந்தவுடன் கட்சி அரசியலில் ஈடுபடுவேன் என்று கூறினார்.

இந்தநிலையில் அமைச்சர்கள் ஜெயக்குமார், வீரமணி, வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட சில அமைச்சர்கள் சசிகலாவுக்கும், டிடிவி தினகரனுக்கும் ஏதிராக பேசி வருகின்றனர். எனவே இந்த அமைச்சகள் நான்கு பேரையும் உடனடியாக நீக்க வேண்டும் என்று தினகரன் அணியினர் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்குதல் அளித்து வருகின்றனர்.

மேலும் டிடிவி தினகரன் ஆதரவாளர்களான செந்தில் பாலாஜி, தோப்பு வெங்கடாச்சலம், பழனியப்பன், தங்க தமிழ் செல்வன் ஆகியோருக்கு பதவி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முதல்வர் நிறைவேற்ற வேண்டும் இல்லை என்றால் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-கள் ஆட்சியை கலைத்து விடுவார்கள் என்று தினகரன் தரப்பினர் கூறிவருகின்றனர்.

இவ்வாறு கோரிக்கைகள் வைப்பதினால் கோரிக்கைகள் நிறைவேறுமா அல்லது அவர்களிடையே பிரிவு உண்டாகி ஆட்சி களையுமா….

Leave a Response