மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்- அமைச்சர் வேண்டுகோள்!

katal

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதையடுத்து, மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

uthaya

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பேரிடர் தடுப்பு மையத்தில் அதிகாரிகளுடன் அவர் இதுதொடர்பாக நேற்று ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் கூறியபோது, ‘‘சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், நாகை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் அனைத்துவித ஏற்பாடுகளுடன் தயார் நிலையில் இருக்குமாறு அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்’’ என்றார்.

Leave a Response