ஜூன் 2ல் வெளியாகும் “ஒரு கிடாயின் கருணை மனு”

Oru Kidaiyin Karunai Manu 2
தரமான படங்களை தயாரிப்பதில் தேசிய அளவில் தன்னிகரற்று இருக்கும் ‘ஈரோஸ் இன்டர்நேஷனல்’ நிறுவனம் தங்களது பெருமைக்கு உரிய தயாரிப்பான “ஒரு கிடாயின் கருணை மனு” படத்தை வருகின்ற ஜூன் 2ஆம் தேதி வெளியிட உள்ளனர். இப்படத்தில் விதார்த் மற்றும் ரவீனா ரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, ரக்ஹுராம் இசையமைக்க, சரண் ஆர்.வி ஒளிப்பதிவை மேற்கொள்ள, கே.எல்.பிரவீன் படத்தொகுப்பினை செய்துள்ளார். சுரேஷ் சங்கையா இப்படத்திற்கு திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார்.

இத்திரைப்படம், சர்வதேச விழாக்களில் நல்ல வரவேரோப்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை பற்றி ஈரோஸ் நிறுவனத்தின் தென் மண்டல தலைமை அதிகாரி சாகர் சத்வானிந தன்னுடைய பத்திரிகை அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, “விஸ்தரிக்க பட்ட கோடை விடுமுறையில் குழந்தைகள் மட்டுமின்றி, பெரியவர்களும் இந்த படத்தை நிச்சயம் ரசிப்பர். கிராமிய பின்னணியில் இருந்து வந்து தற்போது நகரத்தில் வாழ்வோருக்கு தங்களுடைய கிராமிய நினைவுகளை பசுமையாக மீண்டும் நெஞ்சில் பூக்க வைக்கும் ‘ஒரு கிடாயின் கருணை மனு’ என்று சாகர் சத்வானி தெரிவித்துள்ளார்.

Leave a Response